×

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

சென்னை; முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின் வருமாறு; “தோட்டக்கலைப் பண்ணை இயந்திர கண்காட்சி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு, ரசாயங்களின் பயன்பாட்டை குறைத்து, மண்ணின் வளம் காக்க ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு, மிளகாய் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், 200 பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும் ரூ.3. 67 கோடி நிதி ஒதுக்கீடு, உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா வகைகள் அறிமுகப்படுத்தப்படும், விவசாயிகள் நிரந்தரப் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன், சுரைக்காய் பயிரிட ரூ. 9.40 கோடி மானியம் வழங்கப்படும்” ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

The post முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Mukani ,Minister ,MRK Panneerselvam ,Chennai ,Dinakaran ,
× RELATED ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில்...